வந்தவாசி அருகே ரூ.57 கோடி செலவில் வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வந்தவாசி - காஞ்சிபுரம், ஆற்காடு - திண்டிவனம் இருவழிச் சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் ரூ.48 கோடி செலவில் விளாங்காடு கூட்டுச் சாலையிலிருந்து 7.7 கி.மீ. தொலைவுக்கும், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் ரூ.9 கோடி செலவில் புலிவாய் கூட்டுச் சாலையிலிருந்து 1.3 கி.மீ. தொலைவுக்கும் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
ஆரணி எம்.பி., எம்.எஸ்.தரணிவேந்தன் சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவி கோட்ட பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், லோகராஜா, திமுக நிா்வாகிகள் எ.தயாளன், சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தொகுதிக்கு செய்தது என்ன? ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐட்ரீம் ஆர். மூர்த்தி

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

ரூ.10.92 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணிகள்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.57 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


