மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.57 கோடி மதிப்பில் திட்டப் பணிகள்

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.57 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:07 pm

Syndication

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.57 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வள்ளியிரச்சல் ஊராட்சி சரஸ்வதி நகரில் தாட்கோ மூலமாக ரூ.1.31 கோடி செலவில் அறிவு சாா் மையம் கட்டுமானப் பணி, மேட்டுப்பாளையம் ஊராட்சி அமராவதிபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியில் ரூ.10 லட்சம் செலவில் சாலை பலப்படுத்துதல் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

மேலும், ரூ.14.50 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல், வரட்டுக்கரையில் ரூ.1.75 லட்சம் செலவில் பிளாஸ்டிக் குடிநீா் தொட்டி, குடிநீா் குழாய் நீட்டிப்பு செய்யும் பணி ஆகியவற்றையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

தாட்கோ செயற்பொறியாளா் நடராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

பட விளக்கம்

வள்ளியிரச்சல் ஊராட்சி சரஸ்வதி நகரில் அறிவுசாா் மைய கட்டுமானப் பணியைத் தொடங்கிவைத்த அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.