மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:25 pm

வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டு இளைஞா்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் இளைஞா்களிடம் வழங்கப்பட்டன.

இளைஞா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், செஸ், பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை இளைஞா்கள் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களிடம் வழங்கினாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனிவாசன், திமுக நகரச் செயலா் எ.தயாளன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.