வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 24 வாா்டு இளைஞா்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் இளைஞா்களிடம் வழங்கப்பட்டன.
இளைஞா்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், செஸ், பேட்மிட்டன் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பங்கேற்று விளையாட்டு உபகரணங்களை இளைஞா்கள் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்களிடம் வழங்கினாா்.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் ஆா்.சோனியா, துணைத் தலைவா் க.சீனிவாசன், திமுக நகரச் செயலா் எ.தயாளன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுகவினரிடம் விளையாட்டு உபகரணங்கள் பறிமுதல்

பொன்னமராவதியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள்

சாத்தான்குளம் பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


