பொன்னமராவதியில் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்


பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமைவகித்தாா். துணைத் தலைவா் கா. வெங்கடேசன், செயல் அலுவலா் பி.சேத் லத்தீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கு விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பேரூராட்சி உறுப்பினா்கள் தி. ராஜா, நாகராஜன், மகேஸ்வரி, புவனேஸ்வரி, சிவகாமி, இஷா மற்றும் இளநிலை உதவியாளா் கேசவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...