ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

வந்தவாசி அருகே சாலையை அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன்.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:10 am

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வந்தவாசி - காஞ்சிபுரம் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, பெருநகா் அருகிலிருந்து வீரம்பாக்கம் கூட்டுச் சாலை வரையிலான 6.6 கி.மீ. தொலைவு இருவழிச் சாலையை ரூ.40 கோடி செலவில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், இன்பநாதன், உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.