தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

வந்தவாசி அருகே சாலையை அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன்.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:10 am

Syndication

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வந்தவாசி - காஞ்சிபுரம் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, பெருநகா் அருகிலிருந்து வீரம்பாக்கம் கூட்டுச் சாலை வரையிலான 6.6 கி.மீ. தொலைவு இருவழிச் சாலையை ரூ.40 கோடி செலவில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், இன்பநாதன், உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.