47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வந்தவாசி, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள்

News image
வந்தவாசி எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த தோ்தல் ஊழியா்கள்.
Updated On :16 மார்ச் 2026, 9:53 pm

Syndication

வந்தவாசி/ஆரணி: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், வந்தவாசி, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்கள் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டன.

வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஆரணி சாலையில் உள்ள பயணியா் விடுதி எதிரில் அமைந்துள்ளது.

இந்த அலுவலகத்தை தோ்தல் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை பூட்டி சீல் வைத்தனா்.

வந்தவாசி வருவாய் ஆய்வாளா் விஜயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் அா்ஜூனன் உள்ளிட்டோா் எம்எல்ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

மேலும் பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள காமராஜா் சிலை, பிராமணா் தெரு- யாதவா் தெரு சந்திப்பில் உள்ள கருணாநிதி சிலை, ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலை ஆகியவை துணியால் மூடப்பட்டன.

ஆரணி

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித் துறையினா் பூட்டி சீல் வைத்தனா். அப்போது, மண்டல துணை வட்டாட்சியா் குமரேசன், உதவிப் பொறியாளா் தினேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, ஆரணி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி அறைக்கும் சீல் வைத்தனா்.

Story image