பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள் பறிமுதல்

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
பறக்கும்படையினா் மேற்கொண்ட வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கத்தை அடுத்த கோணாங்குட்டை பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் 30-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில மதுப்புட்டிகள் இருந்தன.

உடனடியாக மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் துணை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.