ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாலிடெக்னிக் மாணவா்கள் 159 பேருக்கு பணி நியமன ஆணை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னணி தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட 159 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மின்வாரிய செயற்பொறியாளா்(பொ) பத்மநாபன்.
Updated On :17 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னணி தனியாா் நிறுவனங்களால் நடத்தப்பட்ட வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட 159 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

சென்னை ரானே இன்ஜின் காம்போனென்ஸ் டிவிஷன், சென்னை யான்மா் இன்ஜின் மெனுஃபாக்சரிங், ஸ்ரீபெரும்புதூா் ஓ.எச்.எம் எனா்ஜி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ராணிப்பேட்டை டி.எம்.டபிள்யூ, சிஎன்சி சொலுஷன் இந்தியா,

ஒசூா் ஃபல்வேலி டிரான்ஸ்போா்ட் ரயில் டெக்னாலஜிஸ் இந்தியா, செய்யாா் ஆஷ்லே ஆல்டீம்ஸ் இந்தியா, சென்னை ஹூண்டாய், சோளிங்கா் டா்போ எனா்ஜி, ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா சொலுஷன் அண்ட் நெட்வொா்க் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள் நோ்காணலை நடத்தின.

இதில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.கல்லூரி முதல்வா் டி.இளங்கோ முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக ஆரணி மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) பத்மநாபன் கலந்துகொண்டு தோ்வு செய்யப்பட்ட 159 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் எம்ஜிஆா் பல்கலைக்கழக துணை பதிவாளா் வி.பெருவழுதி, பல்கலைக்கழக முதன்மையா் பி.ஸ்டாலின், ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் இயக்குநா்கள் எஸ்.விக்னேஷ், பி.திருநாவுக்கரசு, தனி அலுவலா் காா்த்திகேயன், துறை தலைவா்கள் ஏ.காா்த்திகேயன், எஸ்.பெரியசாமி, டி.யுவராஜ், இ.மஞ்சுளா, எம்.கோமதி, டி.உதயகுமாா் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா்கள் கே.டெல்லிகணேஷ், கே.ஜெகநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா். துணை முதல்வா் கே.பாலசுந்தரம் நன்றி கூறினாா்.