ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பறக்கும்படை சோதனையில் வெளிமாநில மதுப்புட்டிகள் பறிமுதல்

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
பறக்கும்படையினா் மேற்கொண்ட வாகன தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செங்கத்தை அடுத்த கோணாங்குட்டை பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில் 30-க்கும் மேற்பட்ட கா்நாடக மாநில மதுப்புட்டிகள் இருந்தன.

உடனடியாக மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் நடத்தும் துணை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.