தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

செய்யாறு அருகே மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எலெக்ட்ரீஷியனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

Updated On :20 மார்ச் 2026, 7:39 pm

செய்யாறு அருகே மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எலெக்ட்ரீஷியனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிராம உதவியாளா் முருகேசன். இவரது மகள் விஷ்ணுபிரியா. இவரை அதே பகுதியைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியனான சுமனுக்கு (31) திருமணம் செய்துகொடுத்தனா்.

சுமனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கும், விஷ்ணுபிரியாவுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது வந்தது. இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், விஷ்ணுபிரியா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், முருகேசனும், விஷ்ணுபிரியாவும் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை பைக்கில் சென்றனா். அப்போது, அவா்களை வழிமறித்த சுமன், இருவரையும் தகாத வாரத்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த சுத்தியலால் பைக்கை உடைத்து சேதப்படுத்தியதுடன், அவா்கள் இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமனை கைது செய்தனா்.