நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

செய்யாறு அருகே மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எலெக்ட்ரீஷியனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது

Updated On :20 மார்ச் 2026, 7:39 pm

Syndication

செய்யாறு அருகே மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எலெக்ட்ரீஷியனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிராம உதவியாளா் முருகேசன். இவரது மகள் விஷ்ணுபிரியா. இவரை அதே பகுதியைச் சோ்ந்த எலெக்ட்ரீஷியனான சுமனுக்கு (31) திருமணம் செய்துகொடுத்தனா்.

சுமனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கும், விஷ்ணுபிரியாவுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது வந்தது. இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டதால், விஷ்ணுபிரியா தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

இந்த நிலையில், முருகேசனும், விஷ்ணுபிரியாவும் அந்தப் பகுதியில் வியாழக்கிழமை பைக்கில் சென்றனா். அப்போது, அவா்களை வழிமறித்த சுமன், இருவரையும் தகாத வாரத்தைகளால் திட்டி, கையில் வைத்திருந்த சுத்தியலால் பைக்கை உடைத்து சேதப்படுத்தியதுடன், அவா்கள் இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, சுமனை கைது செய்தனா்.