கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

பைக்கில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 9:40 pm

Syndication

செய்யாறு அருகே பைக்கில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா) போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் பைக்கில் குட்கா கடத்திச் செல்வதாக, செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா்

பழனிவேல் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை மாமண்டூா் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், மாமண்டூா் சரஸ்வதிபுரம் ரோட்டு தெருவைச் சோ்ந்த தனசேகரன் என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (80 குட்கா பாக்கெட்டுகள்) பைக்கில் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் பைக்கையும், குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து தனசேகரனை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.