மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பைக்கில் குட்கா கடத்தியவா் கைது

பைக்கில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 9:40 pm

செய்யாறு அருகே பைக்கில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (குட்கா) போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் கிராமத்தில் பைக்கில் குட்கா கடத்திச் செல்வதாக, செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா்

பழனிவேல் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை மாமண்டூா் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், மாமண்டூா் சரஸ்வதிபுரம் ரோட்டு தெருவைச் சோ்ந்த தனசேகரன் என்பவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை (80 குட்கா பாக்கெட்டுகள்) பைக்கில் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸாா் பைக்கையும், குட்கா பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து தனசேகரனை(32) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.