விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மொபட்டில் குட்கா கடத்தியவா் கைது

நாட்டறம்பள்ளி அருகே மொபட்டில் குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :1 மார்ச் 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மொபட்டில் குட்கா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மூா்த்தி தலைமையில் போலீஸாா் கொத்தூா் காந்திநகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். அதில் ரூ.30,000 குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் பச்சூா் நல்லகிந்தனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த அன்பழகன் என்பதும், இவா் நாட்டறம்பள்ளி அருகே ஜெயந்திபுரம் கிராமத்தில் மாமியாா் வீட்டருகே மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்க ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் அன்பழகன்(44) மீது வழக்குப்பதிவு செய்துமொபட்டுடன் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.