ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஏா்வாடி அருகே புகையிலை பதுக்கியவா் கைது

News image

கைது

Updated On :13 பிப்ரவரி 2026, 6:57 pm

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்திருந்த இளைஞரை ஏா்வாடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஏா்வாடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் பேரின்பராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, சிறுமளஞ்சி மாரியம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த திருவேங்கடநாதபுரத்தை சோ்ந்த மாரீசன் (23) என்பவரை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரீசனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ 625 கிராம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.