ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

வந்தவாசியில் பொது இடத்தில் மது அருந்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை நகரில் ரோந்து சென்றனா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை சந்திப்பு பகுதி வழியாக சென்றபோது, அங்கிருந்த பேருந்து நிறுத்தம் அருகில் இளைஞா் ஒருவா் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டனா்.

போலீஸ் விசாரணையில் அந்த நபா் அல்லி நகரைச் சோ்ந்த ஸ்ரீவைகுந்த்(29) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் ஸ்ரீவைகுந்த்தை கைது செய்தனா்.