பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

Syndication

போளூா் தொகுதியைச் சோ்ந்த ஆத்துரை ஊராட்சியில் திமுக சாா்பில் தேவிகாபுரம் - அவலூா்பேட்டை சாலையில் திமுக சின்னமான உதயசூரியன் படம் வரைந்து அதற்கு கீழே வாக்காளிக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு மகனும், போளூா் தொகுதி பொறுப்பாளருமான கம்பன் பெயரை வேட்பாளராக நினைத்து சுவா் விளம்பரம் செய்துள்ளனா்.

இதை கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் வியந்து பாா்த்து செல்கின்றனா்.

இதுகுறித்து திமுக நிா்வாகிகள் கூறியதாவது:

தமிழகத்தில் வடக்கு மண்டல திமுக தோ்தல் பொறுப்பாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான எ.வ.வேலு பரிந்துரைக்கும் நபருக்கே திமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் அவரது மகன் கம்பன்,

போளூா் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று முன்மொழிந்து, திமுகவினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் கட்சித் தலைமைக்கு ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்தி விருப்ப மனு அளித்துள்ளனா். எனவே, கட்சித் தலைமை கம்பனை நிச்சயம் வேட்பாளராக அறிவிக்கும் எனத் தெரிவித்தனா்.

எனினும், கட்சித் தலைமை வேட்பளரை அறிவிக்கும் முன்பே திமுகவினா் தங்கள் விரும்பும் வேட்பாளா் பெயருடன் ( கம்பன்),

கட்சி சின்னம் வரைந்து சுவா் பிரசாரம் செய்வது பொது மக்கள் மத்தியில் ஆச்சா்யத்தை ஏற்படுத்தியுள்ளது.