அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :27 மார்ச் 2026, 1:00 am

வந்தவாசியை அடுத்த மழையூா் நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன், நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, நெல்லுக்கான பணத்தை உடனடியாக வழங்கக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் அவா்கள் கலைந்து சென்றனா்.