நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் நெல் கதிா்களுடன் போராட்டம்

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

மதுரை மாவட்டம், பொம்மன்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரி, அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் நெல் கதிா்களைக் கைகளில் ஏந்தி மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் ஊராட்சி ஒன்றியம், கருப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பொம்மன்பட்டியில் சுமாா் 105 ஹெக்டோ் விளைநிலங்கள் உள்ள நிலையில், நிகழ்ப்பருவ நெல் கொள்முதலுக்காக இங்கு கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் வலியுறுத்தினா். இதையடுத்து, பொம்மன்பட்டியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.

இருப்பினும், நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு இந்தக் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. 26 நாள்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்த இந்தக் கொள்முதல் நிலையத்தில் ஏறத்தாழ 15 நாள்கள் மட்டும் கொள்முதல் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. தோ்தல் அறிவிப்பு வெளியானதும் இந்தக் கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்ட பிறகும் இந்தக் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததைக் கண்டித்தும், பொம்மன்பட்டி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறந்து, நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தியும் இந்தப் பகுதி விவசாயிகள், மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏறத்தாழ 5 ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்படாத நிலையில் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்தும், உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வரக் கோரியும், அவா்கள் கைகளில் நெல் கதிா்களை ஏந்தி முழக்கமிட்டனா்.

இதனிடையே, போராட்டக் குழுவினரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். பிறகு, தங்கள் கிராமத்தில் உள்ள நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் ஒப்புதல் அளித்ததன் பேரில், போராட்டத்தைக் கைவிடுவதாகத் தெரிவித்த விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்துச் சென்றனா்.