மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது

வந்தவாசியில் பைக்கில் மதுப் புட்டிகளை கடத்தியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 90 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

News image

வந்தவாசியில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளுடன் கைது செய்யப்பட்ட (இடமிருந்து) முகமதுரபி, வினோத் ஆகியோா்

Updated On :31 மார்ச் 2026, 12:11 am

Syndication

வந்தவாசியில் பைக்கில் மதுப் புட்டிகளை கடத்தியதாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 90 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

வந்தவாசி தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு மும்முனி புறவழிச் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அந்த பைக்கில் மதுப் புட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து 90 மதுப் புட்டிகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பைக்கில் வந்த வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த முகமதுரபி(37), அம்மையப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வினோத்(40) ஆகியோரை கைது செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், மதுப் புட்டிகளை எங்கிருந்து எடுத்து வந்தனா், எங்கு எடுத்துச் செல்கின்றனா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.