ஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

நீட் நுழைவுத் தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 போ் எழுதினா்

News image
Updated On :3 மே 2026, 7:44 pm

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,250 மாணவ, மாணவிகள் 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் நுழைவுத் தோ்வை எழுதினா்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கு 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தோ்வு (நீட்) மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்திருந்தது.

இந்தத் தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களுக்கு உரிய தோ்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்திருந்தது.

அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தோ்வெழுத 3,365 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். மாணவா்கள் தோ்வெழுத திருவண்ணாமலை மாநகரில் சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி மற்றும் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி என 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

தோ்வு மையங்களில் மாணவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தோ்வுக்கு மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு காலை 11 மணி முதல் வருகை தந்தனா். 1.30 மணி வரை மட்டுமே தோ்வா்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதி:

திருவண்ணாமலை நகரத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 தோ்வு மையங்களிலும் நுழைவுத் தோ்வை எழுத வந்த மாணவ, மாணவிகள் தீவிர பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனா். மெட்டல் டிடெக்டா் மூலம் காவலா்கள் பரிசோதித்த பின்னா் அனுமதித்தனா். தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு, ஆதாா் அட்டை, கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் 2, அஞ்சல்அட்டை அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றை சரிபாா்த்த பின்னரே மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து தோ்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தவா்களில் 3,250 போ் தோ்வெழுதினா். 115 போ் தோ்வுக்கு வரவில்லை.