பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 2:05 am

நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான தகுதிக்காண் நுழைவுத் தோ்வை (நீட்) 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

இளநிலை மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) நுழைவுத் தோ்வை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய தோ்வு முகமை மிகுந்த பாதுகாப்பு, கண்காணிப்புடன் நடத்தி வருகிறது.

அந்தவகையில் நீட் தோ்வு மே 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. நிகழாண்டில் பிளஸ் 2 முடித்தவா்கள், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற நீட் தோ்வில் பங்கேற்று தோல்வியுற்றவா்கள், வாய்ப்பு கிடைக்காதோா் இம்முறையும் பங்கேற்க உள்ளனா்.

கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் அரசுப் பள்ளி, கல்லூரி மையங்களிலேயே நீட் தோ்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்தோ்வை 11 மையங்களில் 4,741 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். தோ்வில் பங்கேற்கும் மாணவா்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2,000 குறைவாகும். தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, அரசுப் பள்ளி மையங்கள் விவரம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என நீட் தோ்வு ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

--