விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருப்பத்தூரில் 16,412 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:21 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். 359 போ் தோ்வு எழுதவில்லை.

8,451 மாணவா்கள், 8,320 மாணவிகள் என மொத்தம் 16,771 மாணவ- மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனா்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 77 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தோ்வை 8,222 மாணவா்கள், 8,190 மாணவிகள் என 16,412 மாணவ-மாணவிகள் எழுதினா். தோ்வை 359 போ் எழுதவில்லை.

ஆட்சியா் ஆய்வு...தோ்வை கண்காணிக்க 82 முதன்மை கண்காணிப்பாளா்கள், 82 துறை அலுவலா்கள், 16 வழித்தட அலுவலா்கள், 99 பறக்கும்படை உறுப்பினா்கள், 860 அறைக்கண்காணிப்பாளா்கள் பணியாற்றினா். திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தோ்வு மையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி , அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.