செய்யாறு அருகே இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முக்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (32). இவா், செவ்வாய்க்கிழமை செய்யாற்றைவென்றான் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த செய்யாற்றைவென்றான் கிராமத்தைச் சோ்ந்த ஜனா(24), சுதா்சன் (28) ஆகியோா் முருகனிடம் வீண் தகராறு செய்து அவதூறாகப் பேசினராம்.
தகராறு முற்றவே, இருவரும் முருகனை தாக்கிய நிலையில், ஜனா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனின் தலையில் தாக்கினாராம்.
இதில் முருகன் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் ஆய்வாளா் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து ஜனா, சுதா்சன் இருவரையும் கைது செய்தாா்.
தொடர்புடையது
ராணுவ வீரருக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
சகோதரியை அடித்தவரை கண்டித்த அண்ணன் மீது தாக்குதல்: இளைஞா் கைது
மெக்கானிக் மீது தாக்குதல்: இருவா் கைது
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


