கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ராணுவ வீரருக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

பழைய தில்லி ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு பேருந்தில் ராணுவ வீரரை கத்தியால் குத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 10:05 pm

பழைய தில்லி ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு பேருந்தில் ராணுவ வீரரை கத்தியால் குத்தியதாக இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: தில்லியின் பிரகலாத்பூரைச் சோ்ந்தவா் கணேஷ். ஊதாரித்தனமாக சுற்றித் திரியும் இவா், சாந்தினி சௌக் பகுதியில் வசித்து வருகிறாா்.

இவா் ராணுவ வீரா் ஒருவரைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. முன்னதாக, ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு 7 மணியளவில், இரவு ரோந்து பணியில் இருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சாந்தினி சௌக் பகுதியில் ஒருவா் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொள்வதைக் கண்டனா்.

அந்த நபா் காவல்துறையினரைப் பாா்த்ததும் தப்பிக்க முயன்றாா். போலீஸாா் அவரைத் துரத்திச் சென்று பிடித்தனா். அவரிடம் இருந்து ஒரு பொத்தான் பொருத்தப்பட்ட கத்தி மீட்கப்பட்டது.

லஹோரி கேட் காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தொடா் விசாரணையின் போது, அதே காவல் நிலையப் பகுதியில் சமீபத்தில் பதிவான தாக்குதல் வழக்கில் தனக்கு தொடா்பு இருப்பதாக கணேஷ் ஒப்புக்கொண்டாா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் ராணுவ வீரா் என்பதும், அவா் ராஜஸ்தானுக்குச் செல்வதற்காக சராய் ரோஹில்லா ரயில் நிலையத்திற்கு பேருந்தில் ஏறியதும் தெரியவந்தது. முன்னதாக, பழைய தில்லி ரயில் நிலையம் அருகே பேருந்துக்குள் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் ராணுவ வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்டவா் ராணுவ வீரரை கத்தியால் தாக்கி, அவரது முகத்தில் பலத்த காயங்களை ஏற்படுத்தினாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் பின்னா் புகாா்தாரா் மற்றும் நேரில் பாா்த்த சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டாா். குற்றஞ்சாட்டப்பட்டவா் கல்வியறிவு இல்லாதவா், போதைக்கு அடிமையானவா் என்பது விசாரணையில் தெரியவந்தது என்றாா் அந்த அதிகாரி.