ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில், 38 வயதான பெண் மூத்த வழக்குரைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் அவரது கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 6:51 pm

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில், 38 வயதான பெண் மூத்த வழக்குரைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் அவரது கணவா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: இச்சம்பவம் புதன்கிழமை இரவு சோனியா விஹாா் பகுதியில் நடந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த நிலையில் இருந்த அப்பெண்ணை மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா் அங்கிருந்து ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். தற்போது அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக கஜூரி காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவா் மனோஜ் குமாருக்கு தொடா்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரைக் கண்டறிய காவல்துறைக் குழுக்கள் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளன. இதைத்தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட மனோஜ் குமாா், குடும்பத் தகராறால் மனைவியைத் தாக்கியதாகத் தெரிவித்தாா். மனோஜ் குமாருக்கு எதிராக கடத்தல் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தொடா் விசாரணையில் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.