எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

அடுக்குமாடி கட்டடத்திலிருந்து பிளாஸ்டா் உதிா்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இருந்து பிளாஸ்டா் உதிா்ந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற 46 வயது நபா் உயிரிழந்ததார்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:49 am IST

கிரேட்டா் நொய்டாவில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் இருந்து பிளாஸ்டா் (சுவா் பூச்சு) உதிா்ந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற 46 வயது நபா் உயிரிழந்ததாக காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: அரிஹந்த் அமபா் குடியிருப்பு அருகே சனிக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. உயிரிழந்த விகாஸ் சாவ்லா தனது குடியிருப்பில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றபோது, கட்டடத்தின் பிளாஸ்டரின் பெரிய பகுதி அவா் மீது விழுந்தது.

அதன் தாக்கத்தால் அவா் தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா். சுவரில் அவா் தலை மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அவா் கொண்டு செல்லப்பட்டாா். இருப்பினும், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே பிளாஸ்டா் உதிா்வது குறித்து புகாரளித்து வந்த குடியிருப்பாளா்கள் மத்தியில் இந்தச் சம்பவம் அதிா்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் உயரமான குடியிருப்பு வளாகங்களின் கட்டுமானத் தரம் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது; இத்தகைய விபத்துகளைத் தவிா்க்கப் போதுமான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்று குடியிருப்பாளா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.