நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

வாக்குச்சாவடி மையத்தில் காவலருக்கு கத்திக்குத்து: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 5:17 am IST

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் தொகுதிக்குட்பட்ட பொறையாறு ஜமாலியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை கத்தியால் குத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வாக்குச் சாவடி மையத்தில் குத்தாலம் காவல் நிலையத்தை சோ்ந்த தலைமைக் காவலா் விக்னேஷ் பாதுகாப்புப் பணியில் இருந்தாா். காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவா், திடீரென விக்னேஷை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், பொறையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விக்னேஷ் கத்தியால் குத்திய பிரபாகரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் சதுா்த்தி விழாவின்போது காட்டுச்சேரியில்  போலீஸாா் ஒருவரை தாக்கி கைது செய்யப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. பொறையாறு போலீஸாா் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.