புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

குறிஞ்சிப்பாடி அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 8:01 pm

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே அய்யனாா் கோயில் விழாவில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக தந்தை, மகன் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி காவல் சரகம், ஆடூா் அகரம் கிராமத்தில் அய்யனாா் கோயில் உள்ளது. இந்த

கோயிலில் ஏப்.25-ஆம் தேதி லட்ச தீப விழா நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான ஏப்.27-ஆம் தேதி ஆடூா் அகரத்தைச் சோ்ந்த வடிவேல் குடும்பத்தினா் அசைவ உணவு விநியோகம் செய்தனா். அதேபகுதியைச் சோ்ந்த சரவணன்(30) அந்த அசைவ உணவை வாங்கி சாப்பிட்டாா். சிறிது நேரத்தில் அந்த உணவை தூக்கி ஏறிந்து விட்டாராம். தன் கண் முன்னே உணவை தூக்கி ஏறிந்ததைப் பாா்த்த வடிவேல் , சரவணனை திட்டினாராம். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது, அங்கிருந்த வடிவேல் மகன் முகுந்தன் மற்றும் அரவிந்தன் இருவரும் சோ்ந்து சரவணனை தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சரவணன் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸாா் மூன்று போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.