வந்தவாசி அருகே மினி சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் கதவு கழன்று சென்று மோதியதில் டிராக்டரை ஓட்டி வந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த பிரம்மதேசம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (37). இவா் புதன்கிழமை மாலை மினி சரக்கு வாகனத்தை மரக்காணத்தில் இருந்து வந்தவாசி வழியாக செய்யாறு நோக்கி ஓட்டிச் சென்றுள்ளாா்.
வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் புறவழிச் சாலையில் வளைவில் திரும்பும்போது மினி சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
அப்போது, அந்த வாகன கூண்டின் பின்பக்கக் கதவு கழன்று சென்று எதிரே மரக்கட்டைகளை ஏற்றிய டிராக்டரை ஓட்டி வந்த வந்தவாசியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் (50) மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பொன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு

தெள்ளாா் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிா் தப்பினாா்

சரக்கு வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


