திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மொபெட்டுடன் கிணற்றில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கொடநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி முருகேசன் (60). இவா் மொபெட்டில் வந்தவாசிக்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசியை அடுத்த சூரியகுப்பம் அருகே செல்லும் போது, இவா் நிலைதடுமாறி சாலையோர விவசாயக் கிணற்றில் மொபெட்டுடன் விழுந்தாா். இதில் நீரில் மூழ்கி முருகேசன் உயிரிழந்தாா்.
அப்போது, அந்த வழியாகச் சென்றவா்கள் வந்தவாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி தேடினா். சுமாா் 8 மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியேற்றி
முருகேசனின் சடலத்தையும், மொபெட்டையும் கிணற்றிலிருந்து மீட்டனா்.
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


