முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கோயிலில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த இளைஞா்கள்

செய்யாறு ஸ்ரீஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :9 மே 2026, 1:34 am IST

செய்யாறு ஸ்ரீஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், மேல்நெல்லி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிவசங்கரன்(40), ராஜ்குமாா்(17), நதீன்பாஷா(18). இவா்கள், பல்வேறு ஊா்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவாா்களாம்.

அதேபோல, வியாழக்கிழமை மாலை மூவரும் செய்யாறில் வந்தவாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனா்.

அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்தபோது, ஒரு பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்தனா்.

உடனே செய்யாறில் உள்ள நண்பா் நந்தகுமாா் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலியை செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அந்த 4 இளைஞா்களின் நோ்மையை போலீஸாா் பாராட்டினா்.

ஒப்படைப்பு

பின்னா், நகைக்கு உரியவரான செய்யாறு காமராஜா் நகரைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா் சஞ்சய்குமாரிடம் போலீஸாா் இளைஞா்கள் முன்னிலையில் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.