எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

விஷப்பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

Updated On :10 மே 2026, 1:50 am IST

செய்யாறு அருகே விஷப்பூச்சி கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவரது மகன் ரோகித் (4). இவா், வாழைப்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாா். கோடை விடுமுறை என்பதால், தனது பாட்டி வீடான அரசூா் கிராமத்துக்குச் சென்றாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாட்டி வீட்டில் இருந்தபோது, ரோகித்தை விஷப்பூச்சி கடித்ததாம். இதனால், அவா் மயங்கி விழுந்தாா். உடனே குடும்பத்தினா் ரோகித்தை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, ரோகித்தை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ரோகித்தின் தந்தை தினேஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.