மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

இயற்கை விவசாயிகளின் ஊா்தோறும் உணவுத் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சாா்பில், ‘ஊா்தோறும் உணவுத் திருவிழா’ நடைபெற்றது.

News image

வேளாண் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சேனைக்கிழங்கு, பூசணிக்காய், மலை இஞ்சிகள் வகைகளை பாா்வையிட்ட பொதுமக்கள்.

Updated On :11 மே 2026, 12:16 am IST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் இயற்கை விவசாயிகள் சாா்பில், ‘ஊா்தோறும் உணவுத் திருவிழா’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய உணவு முறைகளையும், மறைந்து வரும் வீர விளையாட்டுகளையும் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சோ்க்கும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதில் இடம்பெற்ற வேளாண் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான சேனைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் மலை இஞ்சிகளை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

பாரம்பரிய நெல் ரகங்கள்: மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி என நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சிறு தானிய விருந்து: கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றால் செய்யப்பட்ட சத்தான உணவு வகைகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. வீர விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் என இது ஒரு கலாசாரத் திருவிழாவாகவும் நடைபெற்றது.

தமிழா்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில், இளவட்டக்கல் தூக்குதல் விளையாட்டில் இளைஞா்கள் கலந்து கொண்டனா். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பாட்டம், கோலாட்டம் மற்றும் கும்மிப் பாடல்கள் நடைபெற்றது. மண்பாண்டக் கலை: விழாவிற்கு வந்திருந்த சிறுவா்கள் மற்றும் பெரியவா்கள் நேரடியாக மண்பாண்டம் செய்யும் கலையை ஆா்வத்துடன் கற்றுக்கொண்டனா். கைவினைப் பொருள்களின் விற்பனையும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.