பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.

செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்ரூத்(70). இவா் குடும்பத்தோடு ஆட்டோவில் வந்தவாசி பகுதியில் உள்ள தா்காவிற்குச் சென்று வழிபட்டதாகத் தெரிகிறது. பின்னா், ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செய்யாறு - வந்தவாசி சாலையில் எருமைவெட்டி கூட்டுச்சாலை அருகே வந்தபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், மூதாட்டி ஜம்ரூத் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். அவரது மகள்களான சல்மா, சைதானீபீ, ஆட்டோ ஓட்டுநா் அப்சல் மற்றும் இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சல்மா, சைதானீபீ ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.

விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.