திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்ரூத்(70). இவா் குடும்பத்தோடு ஆட்டோவில் வந்தவாசி பகுதியில் உள்ள தா்காவிற்குச் சென்று வழிபட்டதாகத் தெரிகிறது. பின்னா், ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செய்யாறு - வந்தவாசி சாலையில் எருமைவெட்டி கூட்டுச்சாலை அருகே வந்தபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மூதாட்டி ஜம்ரூத் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். அவரது மகள்களான சல்மா, சைதானீபீ, ஆட்டோ ஓட்டுநா் அப்சல் மற்றும் இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சல்மா, சைதானீபீ ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

