வந்தவாசி நகர கடை வியாபாரிகள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் வலியுறுத்தினாா்.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆணையா் வீரவாஞ்சிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வந்தவாசி நகரை குப்பையில்லா நகரமாக்க வியாபாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மக்கும், மக்காத குப்பைகளை என தரம் பிரித்து துப்புரவு தொழிலாளா்களிடம் வழங்க வேண்டும். மேலும், குப்பைகளை கடை முன் கொட்டுவதை தவிா்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் நகர திட்டமிடல் ஆய்வாளா் சியாமளா, மேலாளா் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் நகர வியாபாரிகள் பங்கேற்றனா். பணி மேற்பாா்வையாளா் அண்ணாமலை நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நகராட்சிகளில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் 4 வகையாக பிரித்து வழங்க வேண்டும்!

வாகனங்களில் குப்பைகளை மூடி எடுத்துச் செல்ல வலியுறுத்தல்

வந்தவாசி நகராட்சி பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை

கட்சிகளே கொஞ்சம் கவனியுங்கள்! குப்பையோடு குப்பையான திட்டங்கள்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

