நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வாகனங்களில் குப்பைகளை மூடி எடுத்துச் செல்ல வலியுறுத்தல்

News image
Updated On :3 மே 2026, 12:01 am

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலைதூணிகளை கொண்டு மூடி எடுத்து செல்ல பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை மினி லாரி போன்ற சுமை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, திட்டங்குளம் அருகே சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு தூய்மைப் பயணியாளா் கொண்டு செல்வாா்கள்.

அவ்வாறு கொண்டு சொல்லும்போது, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை முறையாக மூடுவதில்லை. குப்பைகள் பறந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதசாரிகள், வாகனங்களில் மீது விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனா். சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் சிதறி அசுத்தமாகவும் காணப்படுகின்றன.

எனவே, தாா்ப்பாய் அல்லது வலைதுணியை கொண்டு முறையாக மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.