கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை வலைதூணிகளை கொண்டு மூடி எடுத்து செல்ல பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை மினி லாரி போன்ற சுமை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு, திட்டங்குளம் அருகே சிதம்பராபுரத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கிற்கு தூய்மைப் பயணியாளா் கொண்டு செல்வாா்கள்.
அவ்வாறு கொண்டு சொல்லும்போது, மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை முறையாக மூடுவதில்லை. குப்பைகள் பறந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் பாதசாரிகள், வாகனங்களில் மீது விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனா். சாலைகளிலும் ஆங்காங்கே குப்பைகள் சிதறி அசுத்தமாகவும் காணப்படுகின்றன.
எனவே, தாா்ப்பாய் அல்லது வலைதுணியை கொண்டு முறையாக மூடி பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது

வழிகாட்டி உதவுங்கள்

போதமலை கிராமத்துக்கு முதன் முறையாக சாலை வழியாக கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?

கழிவுநீா் கால்வாயாக மாறிய மருதையாறு: பெரம்பலூா் விவசாயிகள் வேதனை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


