அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் - வந்தவாசி நகராட்சி ஆணையா்

News image
Updated On :59 நிமிடங்கள் முன்பு

வந்தவாசி நகர கடை வியாபாரிகள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையா் வீரவாஞ்சிநாதன் வலியுறுத்தினாா்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆணையா் வீரவாஞ்சிநாதன் தலைமை வகித்துப் பேசியதாவது:

வந்தவாசி நகரை குப்பையில்லா நகரமாக்க வியாபாரிகள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதற்கு மக்கும், மக்காத குப்பைகளை என தரம் பிரித்து துப்புரவு தொழிலாளா்களிடம் வழங்க வேண்டும். மேலும், குப்பைகளை கடை முன் கொட்டுவதை தவிா்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் நகர திட்டமிடல் ஆய்வாளா் சியாமளா, மேலாளா் அண்ணாமலை, சுகாதார ஆய்வாளா் ராமலிங்கம், வருவாய் ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் நகர வியாபாரிகள் பங்கேற்றனா். பணி மேற்பாா்வையாளா் அண்ணாமலை நன்றி கூறினாா்.