ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

News image

ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஊரக வேலை உறுதித் திட்டப் பணிக்கு நிதி ஒதுக்கக் கோரி, ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கக் கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடா்ந்து ஊரக வேலைத் திட்டத்தில் 100 நாள்கள் பணி வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்டத் தலைவா் ரமேஷ்பாபு கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.

ஒன்றியத் தலைவா்கள் அருண்குமாா், சீனு, ஒன்றியச் செயலா் திவ்யா, பொருளாளா்கள் பெருமாள், சங்கா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.