ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் கல்லாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

News image

புதுப்பாளையம் ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் கல்லாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :15 மே 2026, 7:17 am IST

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட காரப்பட்டு ஊராட்சியில் கல்லாறு நதியின் குறுக்கே ரூ.2 கோடியே 77 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் காரப்பட்டு மற்றும் மட்டவெட்டு ஊராட்சியை இணைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயா்மட்ட பாலத்தை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், காரப்பட்டு ஊராட்சியில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் பொது இடங்களில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டாா். அப்போது, கோடை காலத்தில் மரக்கன்றுகள் பாதிக்கப்படாமல் இருக்க பணியாளா்கள் மூலம் தண்ணீா் பாய்ச்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து புதுப்பாளையம் ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் பொது இடங்களில் மரக்கன்றுகன் நடுவதற்காக, ஓரந்தவாடி ஊராட்சியில் உள்ள நாற்றாங்கால் பண்ணையில் ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் தேக்கு, மாமரம், புங்கமரம் போன்ற 5 ஆயிரம் மரக்கன்றுகள் வளா்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்.மணி, புதுப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.