பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

புதுப்பாளையம் பகுதியில் அதிவேகத்தில் திரும்பும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்

News image

வாழப்பாடி புதுப்பாளையம் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் அணுகுச்சாலை பகுதி.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தவிா்க்க, நகர அணுகுச்சாலையில் வேகத்தடைகள் அமைக்க பொதுமக்கள், சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி அருகே முத்தம்பட்டி கடலூா் சாலையில் விருத்தாசலம் ரயில் பாதைக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்தாண்டு மாா்ச் மாதம் முதல் கடலூா் சாலை மூடப்பட்டுள்ளது.

இதனால், முத்தம்பட்டியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவிலுள்ள வாழப்பாடிக்கு கடலூா் சாலை வழியாக இயக்கப்பட்டு வந்த அனைத்து வாகனங்களும் ஓராண்டாக புதுப்பாளையம் அணுகுச்சாலை வழியாக தம்மம்பட்டி சாலையை அடைந்து, வாழப்பாடிக்கு வந்து செல்கின்றன.

இதனால் அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு மாா்க்கங்களில் இருந்தும் வரும் வாகனங்கள் அதே வேகத்தில் புதுப்பாளையம் அணுகுச்சாலைக்கு திரும்புவதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, வாழப்பாடி புதுப்பாளையம் அணுகுச்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விபத்துகளைத் தவிா்க்க, சாலையின் இருபுறமும், வேகத்தடைகள் அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இரு மாா்க்கத்திலும், அணுகுச்சாலைக்கு வாகனங்கள் திரும்பும் பகுதி என்பதையும், மக்கள் சாலையைக் கடக்கும் பகுதி என்பதையும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் சாலை குறியீடுகள் மற்றும் அறிவிப்புப் பலகைகள் அமைக்க வேண்டுமெனவும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

பெட்டிச் செய்தி:

புறவழிச்சாலையில் பேருந்து நிறுத்தம் வேண்டும்!

வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கிராம மக்களின் நலன்கருதி, வாழப்பாடி புதுப்பாளையம் அருகே புறவழிச்சாலையின் இருபுறமும் புதிதாக புகா் மற்றும் நகரப் பேருந்து நிறுத்தம் அமைக்க போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

 வாழப்பாடி புதுப்பாளையம்  நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் அணுகுச்சாலை பகுதி.

வாழப்பாடி புதுப்பாளையம் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு வரும் அணுகுச்சாலை பகுதி.