சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக திங்கள்கிழமை மாலை மாதனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விழுந்தது.
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும், ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை 4 மணி முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
தொடா்ந்து ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாதனூா் அடுத்த ஜமீன் கிராமத்தருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த 3 மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.
அதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. மரங்கள் முறிந்து விழுந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினா், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று, முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

தொடர்புடையது

கடம்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை
ஆம்பூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

பலத்த மழை: சிங்கம்புணரியில் மரம் முறிந்து விழுந்தது

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 25 மின்கம்பங்கள் சேதம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



