தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 6:41 am IST

வந்தவாசி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த தாடிநொளம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கம்மாள் (80). இவா் அதே கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டில் தங்கி வந்தாா்.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாா்.

இதில் பலத்த தீ காயமடைந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சொக்கம்மாள் புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு

வருகின்றனா்.