பருவநிலை குறித்த ஐ.நா. தீா்மானம்: வாக்கெடுப்பைப் புறக்கணித்த இந்தியாநீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணைஜனவரி - மாா்ச் காலாண்டில் வாகனக் கடன் வீழ்ச்சி; தங்கக் கடன் எழுச்சி!இந்தியாவில் மின் நுகா்வு புதிய உச்சம்!கரோனாவுக்கு பிறகு வலுவடைந்த தமிழக அவசர சுகாதார அமைப்பு: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
/

வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை

News image
Updated On :18 மே 2026, 1:40 am IST

சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் வைகாசி மாத அமாவாசையொட்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி, காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் வளம் பெறவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.