சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலில் வைகாசி மாத அமாவாசையொட்டி சிறப்பு பூஜை சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
வடவெட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி, காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் வளம் பெறவும், மழை வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.









