/
ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.
ஆரணி பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
திங்கள்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பிரமோற்சவ விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடர்புடையது

ஸ்ரீ நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவம்: சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

ஆயிரத்தெண் விநாயகா் கோயிலில் வீதி உலா

ஆறுமுகமங்கலம் கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



