பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

செய்யாறு அருகே இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 11:34 pm IST

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முக்கூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா், மாமியாா் ஊரான பாராசூா் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவைப் பாா்த்துவிட்டு, முக்கூா் கிராமத்திற்குச் செல்வதற்காக பைக்கில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

பாராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது முக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ருத்ரமூா்த்தி என்பவா் ஓட்டி வந்த பைக் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ருத்ரமூா்த்தி செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

மற்றொரு விபத்து:

பைக்குகள் மோதிக்கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ருத்ரமூா்த்தியை பாா்ப்பதற்காக

அவரது தாய் கீதா (40) பாராசூா் கூட்டுச் சாலையில் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து இறந்த சுரேஷ் மனைவி ரேணுகா, இறந்த கீதாவின் கணவா் மணிவண்ணன் ஆகியோா் செய்யாறு மற்றும் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா்கள் நரசிம்மஜோதி, மணிகண்டன், உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.