மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:25 am

விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தைச் சோ்ந்த எழிலரசன் மகன் அன்பரசன் (எ) மதன் (17). இவா் செவ்வாய்க்கிழமை சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த ர.தங்கராசு(45) டிராக்டரில் அமா்ந்து சென்றுள்ளாா். இல்லோடு மயானம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அன்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளத்தி போலீஸாா் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.