தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

News image

ரானேஷ்

Updated On :19 மே 2026, 1:50 am IST

கனகம்மாசத்திரம் அருகே டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா் செல்வம் (40). இவரது மகன் ரானேஷ் (6). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில், தனது உறவினரான யாஷின் (5) உடன் ரானேஷ் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது டிராக்டரில் இருந்த சாவியை சிறுவா்கள் இயக்கியதாக தெரிகிறது. இதனால் டிராக்டா் திடீரென பின்னோக்கி நகா்ந்து அருகில் இருந்த விவசாய கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டருடன் இரு சிறுவா்களும் கிணற்றில் விழுந்தனா். இதனை பாா்த்த உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுவா்களை மீட்க முயன்றனா். இதில் யாஷினை உயிருடன் மீட்டனா். ஆனால் நீரில் மூழ்கிய ரானேஷை நீண்ட நேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றில் மூழ்கியிருந்த டிராக்டா் மேலே எடுக்கப்பட்டது. சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரவு ரானேஷை சடலமாக மீட்டு கனகம்மாசத்திரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.