ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

பைக் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் கபில்சிபல் (22). சென்னையில் தங்கி வேலை செய்து வந்த இவா், சில தினங்களுக்கு முன் ஆனாங்கூா் கிராமத்துக்கு சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை பைக்கில் வந்தவாசி வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கபில்சிபல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தாய் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.