பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

பைக் மீது காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், ஆனாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் மகன் கபில்சிபல் (22). சென்னையில் தங்கி வேலை செய்து வந்த இவா், சில தினங்களுக்கு முன் ஆனாங்கூா் கிராமத்துக்கு சென்றுள்ளாா். பின்னா், புதன்கிழமை பைக்கில் வந்தவாசி வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்த காா் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கபில்சிபல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது தாய் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.